ஆர்எஸ்எஸ் இணைச் செயலர் சி.ஆர்.  express
இந்தியா

ஹிந்தி கற்க கட்டாயப்படுத்த முடியாது, ஆனால்...: ஆர்எஸ்எஸ் இணைச் செயலர்

கல்விச் சிந்தனை அரங்கில் ஆர்எஸ்எஸ் இணைச் செயலர் சி.ஆர். முகுந்தா பேசியது...

DIN

ஹிந்தி கற்க யாரையும் கட்டாயப்படுத்த முடியாது, ஆனால் மூன்று மொழிகளைக் கற்றுக் கொள்வது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் இணைச் செயலர் சி.ஆர். முகுந்தா தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 திங்கள்கிழமை காலை தொடங்கியது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் இணைச் செயலர் சி.ஆர். முகுந்தா, வளர்ந்த இந்தியாவுக்கான மதிப்பீடுகள் குறித்து உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

“ஒவ்வொரு சமூகமும் தனித்தனி அமைப்பை உள்ளடக்கியது. இந்த அமைப்பில் உள்ள அனைவரும் ஆர்.எஸ்.எஸை சேர்ந்தவர்கள் என்று நினைக்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ். கொள்கையை ஒத்த பார்வைகளைக் கொண்டவர்கள் அரசாங்கத்தில் உள்ளனர். ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களை பொதுக்கல்வியில் கொண்டுவர அவர்கள் முயற்சிக்கின்றனர்.

கலாசாரமும் அதன் மதிப்பீடுகளும் கல்வி வழியாகவே புகுத்தப்பட்டதாக நாங்கள் கருதுகிறோம். இது பள்ளிக் கல்வியில் மட்டுமல்ல, குடும்பம், சமூகத்திலிருந்தும் செய்யப்பட்டன.

இந்தியாவுக்கான தனித்துவமான கண்ணோட்டத்தை ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. அரசியல், நீதித்துறை, தொழில்துறைகளில் இது இல்லை என்று நாங்கள் உணர்கிறோம்.

நான் ஆங்கிலம் அல்லது ஹிந்திக்கு எதிரானவன் அல்ல. ஆனால், ஹிந்தியை ஒரு பிரசாரமாக எதிர்ப்பது நாட்டுக்கு நல்லதல்ல. யாரையும் ஹிந்தி கற்றுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது, ஆனால், நீங்கள் மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருவர் தாய்மொழியைக் கற்றுக்கொள்வதில் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். எங்கள் உறுப்பினர்களை குறைந்தது இரண்டு மொழிகளைக் கற்றுக்கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். இப்போது அனைவரும் மூன்று மொழிகளைக் கற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தாய் மொழி, பிராந்திய மொழி மற்றும் ஒரு தொழில் மொழி” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT