கேரளத்தில் 5 மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை!
மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது..
கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்குக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேசமயம், மாநிலத்தின் மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
11 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கையும், 6 செ.மீ முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது,
Advertisement
Advertisement
இதற்கிடையில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள உப்பலா மற்றும் மொக்ரல் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
As rains lashed several parts of Kerala on Wednesday, leading to rise in water levels of various rivers, the India Meteorological Department (IMD) issued an orange alert in five districts for the day.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.