விராட் கோலி  படம்: website/one8 commune
இந்தியா

கோலியின் உணவகத்துக்கு அபராதம்! எதற்கு?

விராட் கோலியின் உணவகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பற்றி...

DIN

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான மதுபான விடுதியுடன் கூடிய உணவகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒன் 8 கம்யூன் என்ற பிரபல மதுபான விடுதி மற்றும் உணவகத்தை விராட் கோலி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள மதுபான விடுதியின் உணவகப் பகுதியில் ‘புகைப்பிடிக்க அனுமதியில்லை’ என்ற அறிவிப்பு பலகை வைக்காததால் பெங்களூரு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

ஏற்கெனவே, ஒன் 8 கம்யூன் மதுபான விடுதியின் மீது இரண்டு முறை நடவடிக்கை எடுக்கப்பட்டு சர்ச்சையானது.

முதலில், கடந்தாண்டு ஜூன் மாதம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து மதுபான விடுதியை நடத்துவதாக பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம், தீயணைப்புத் துறையிடம் முறையான அனுமதி பெறாத குற்றச்சாட்டுக்காக பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT