கோப்புப் படம்
இந்தியா

பல்கலை வளாகத்தில் தொழுகை நடத்திய மாணவர்கள்: நிர்வாகம் மீது காவல்துறை வழக்குப்பதிவு!

50 மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

DIN

உ.பி.யில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் திறந்தவெளியில் தொழுகை நடத்திய நிலையில் பல்கலை நிர்வாகம் மீது வழக்குப்பதியப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் ஐஐஎம்டி தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் காலித் பிரதான்.

இவர் ஹோலி பண்டிகையின்போது பல்கலை வளாகத்தில் சுமார் 50 மாணவர்கள் திறந்தவெளியில் தொழுகை நடத்தும் காணொளியைப் பகிர்ந்திருந்தார்.

காணொளி பரவியதைத் தொடர்ந்து, பல்கலை வளாகத்தில் தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகத்தால் அந்த காணொளியை எடுத்த மாணவர் பிரதான் இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், 3 பாதுகாவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பல்கலை நிர்வாகம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பல்கலை வளாகத்தில் மாணவர்கள் அனுமதியின்றி தொழுகை நடத்திய காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து மாணவர் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

SCROLL FOR NEXT