கோழிக்கோடு பேருந்து நிலைய கடையில் தீ விபத்து!
கேரள மாநிலம் கோழிக்கோடு பேருந்து நிலைய துணிக் கடையில் இன்று (மே 18) மாலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பேருந்து நிலைய துணிக் கடையில் இன்று (மே 18) மாலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
மாலை 5 மணியளவில் நேரிட்ட தீ விபத்தை சுமார் 2 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள கட்டடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள துணி கிடங்கில், இன்று மாலை பயங்கர தீ விபத்து நேரிட்டது. கிடங்கில் துணிகள் இருந்ததால், உடனடியாக தீ மளமளவென அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது.
Advertisement
Advertisement
துணி கிடங்கில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
பேருந்து நிலையக் கட்டடத்தில் தீ விபத்து நேரிட்டதால், கீழே தரைதளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்துகள், உடனடியாக அகற்றப்பட்டன.
தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணிநேரத்திக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்தின் சேத மதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிக்க | துருக்கி கல்வி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் ரத்து!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.