FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஒடிசாவில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! ஒரே நாளில் 12 குற்றவாளிகள் கைது!

ஒடிசாவில் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 22 மே 2025, 9:31 pm IST
கோப்புப் படம்
பகிர்:

ஒடிசாவில் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையில் ஒரே நாளில் 12 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்திலுள்ள பெர்ஹம்பூர் பகுதியில் இன்று (மே 22) காவல் துறையினர் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். பெர்ஹம்பூர் காவல் துறை உயர் அதிகாரி சரவண விவேக் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதில், படா பஜார் பகுதியில் 4 பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், பெர்ஹம்பூரின் சர்தார் காவல் துறையினரால் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்தும் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், நிமாகாண்டி மற்றும் திகாபஹாண்டி காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில், 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த முழு நடவடிக்கையில் மொத்தம் 6 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, கஞ்சம் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களில் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கைகளினால், 49 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 31 துப்பாக்கிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மீண்டும் ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் ராகுல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments