தெரு நாய்கள் 
இந்தியா

தில்லியில் 10 லட்சம் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த திட்டம்!

தில்லி அரசின் புதிய திட்டம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

10 லட்சம் (1 மில்லியன்) தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, தில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்திருப்பதாவது: “அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாய்கள் கணக்கெடுப்பு, அவற்றுக்கு உணவு வழங்குவதை நெறிப்படுத்துதல் தொடர்பாகவும் சட்ட்விரோதமாக உரிய உரிமமைன்றி வளர்ப்பு பிராணிகள் கடைகளை விற்பனை செய்வதற்கு எதிராக நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் புதன்கிழமை(செப். 10) நடத்தப்பட்ட ஆலோசனையில் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

தேசிய தலைநகரில் தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வைத் தேடிவருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்திருந்த நிலையில், அதற்கான செயல்திட்ட முறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

தில்லி தலைமைச் செயலகத்தில் விலங்குகள் நல வரியம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், வெறிநாய்க்கடிக்கு தீர்வு காணப்படுவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.

நாய்களுக்கு சிப்கள் (சில்லுகள்) பொருத்தி கண்காணித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அதனை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய நவடிக்கைகல் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விலங்குச் சந்தைகளில் நடமாட்டத்தை கண்காணிக்க விலங்குச் சந்தை கண்காணிப்புக் குழுவும் அமைக்கபடவுள்ளது.

வெகுவிரைவில் இந்த நடவடிக்கைகள் அமலாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

Around 1 million stray dogs to be microchipped over next 2 years: Delhi Minister Kapil Mishra

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தமபாளையத்தில் பலத்த மழை!

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...? ஈ.ஆர்.ஈஸ்வரன்

ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 7 போ் மீது வழக்கு

உசிலம்பட்டி கோட்டத்தில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT