சிமெண்ட், கட்டுமானப் பொருள்கள் விலை குறையப்போகிறது: மணிப்பூரில் மோடி!
மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் அங்கு சென்றுள்ள பிரதமர் மோடி தெரிவித்திருப்பவை...
மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் இன்று (செப். 13) அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
மணிப்பூர் தலைநகர் இம்பால் நகரில் அவர் பேசுகையில், “அரசு ஜிஎஸ்டியை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைத்துள்ளது. இதனால் மணிப்பூர் மக்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிட்டும். தினசரி பயன்படுத்தும் பொருள்களின் விலை இப்போது குறையும்.
அதேபோல, சிமெண்ட், வீடு கட்டுமானப் பொருள்களின் விலையும் குறையும். இது வளர்ச்சியை ஊக்குவிக்கப் போகிறது” என்றார்.
Advertisement
Advertisement
மேலும் அவர் பேசுகையில், துரதிர்ஷ்டவசமாக, இந்த அழகான பகுதியில் வன்முறை சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனையைப் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசால் கடந்த சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தத்தில், முன்பு 5, 12, 18, 28 (கூடுதலாக சில பொருள்கள் மீது விதிக்கப்பட்ட செஸ் வரி) சதவீதங்களில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி, தற்போது 5 சதவீதம் (அத்தியாவசிய மற்றும் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு), 18 சதவீதம் (பிற சரக்கு மற்றும் சேவைகளுக்கு) என எளிதாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிமெண்ட், வீடு கட்டுமானப் பொருள்களின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: மணிப்பூர் அமைதிக்காக பாடுபடுவேன்! மோடி வாக்குறுதி!
Imphal: PM Narendra Modi says, “The government has significantly reduced GST and the cost of cement and house construction will also come down.”
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.