FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

2047-இல் ஒவ்வொரு துறையிலும் இந்தியாதான் நம்பர்-1 என்பதே குறிக்கோள்: அமித் ஷா

குஜராத்தில் கட்டப்பட்டுள்ள வீர சாவர்க்கர் விளையாட்டு வளாகம்’ திறப்பு விழாவில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளவை...

Updated On : 14 செப்டம்பர் 2025, 10:40 pm IST
குஜராத்தில் கட்டப்பட்டுள்ள வீர சாவர்க்கர் விளையாட்டு வளாகம்’ திறப்பு விழாவில் அமித் ஷா - PTI
பகிர்:

2047-இல் ஒவ்வொரு துறையிலும் இந்தியாதான் முதன்மை நாடாக இருக்கும் என்று அமித் ஷா குறிப்பிட்டு பேசியுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டுளள ‘வீர சாவர்க்கர் விளையாட்டு வளாகம்’ திறப்பு விழா இன்று(செப். 14) நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய அமித் ஷா: “2036-இல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த மத்திய அரசு ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் மோடி நமக்கு இலக்கு ஒன்றை வைத்துள்ளார். அது என்னவெனில், 2047-இல் உலகில் ஒவ்வொரு துறையிலும் நம்பர்-1 ஆக இந்தியாவை மாற்ற வேண்டுமென்பதே! அவற்றுள் விளையாட்டும் ஒன்று” என்றார்.

Advertisement

Advertisement

"Goal to make India number 1 in every field by 2047," Amit Shah

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments