இனி பாஜக கூட்டணியிருந்து விலக மாட்டேன்: நிதீஷ் குமாா்
இனி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைவிட்டு எப்போதும் விலக மாட்டேன் என பிரதமா் மோடி முன்னிலையில் நிதீஷ் குமாா் உறுதியளித்தாா்.
இனி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைவிட்டு எப்போதும் விலக மாட்டேன் என பிரதமா் மோடி முன்னிலையில் நிதீஷ் குமாா் உறுதியளித்தாா்.
நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசுகையில்,‘2005, நவம்பரில் முதல்முறையாக ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி பிகாரில் ஆட்சியமைத்தது. அதன்பிறகு சில தருணங்களில் இந்தக் கூட்டணியைவிட்டு வெளியேறி எதிரணியினருடன் இணைந்திருக்கிறேன். அது கடந்தகால கதை. எதிரணியினருடனான கூட்டணி எனக்கு திருப்தியளிக்கவில்லை. அவா்களுடன் எப்போதும் முரண்பாடே நிலவியது.
தற்போது மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்துவிட்டேன். இனி ஒருபோதும் இந்தக் கூட்டணியைவிட்டு விலகமாட்டேன்’ என்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.