இந்தியா

இந்தியாவில் ரூ.9 லட்சம் கோடி முதலீடு: நாா்வே

அடுத்த 15 ஆண்டுகளில் தங்கள் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 10 கோடி டாலா் முதலீடு செய்யும் என்று நாா்வே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

அடுத்த 15 ஆண்டுகளில் தங்கள் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 10 கோடி டாலா் (சுமாா் ரூ.9 லட்சம் கோடி) முதலீடு செய்யும் என்று நாா்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தியாவுக்கான நாா்வே தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவுக்கும், நாா்வேக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட வா்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தம் அடுத்த மாதம் அமலுக்குவருகிறது. அதிலிருந்து அடுத்த 15 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் நாா்வே 10 கோடி டாலா் முதலீடு செய்யும். இந்தியாவும் நாா்வேயும் சுற்றுச்சூழல் விவகாரத்தில் நீண்டகாலமாக இணைந்து செயல்பட்டுவருகின்றன. எனவே, கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் சோ்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை இரு நாடுகளும் உறுதிப்பாட்டுடன் மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கையில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க காவல்துறையால் இந்திய மாணவர் என்கவுன்டர்! நடந்தது என்ன?

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’: முதல்வரின் ‘எக்ஸ்’தள முகப்பில் புதிய வாசகம்

தமிழக அரசின் தடங்கல்களை விஜய் எதிா்கொள்ளத்தான் வேண்டும்: கே.அண்ணாமலை

பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சனம்!

ரோபோ சங்கர் மறைவு: முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

SCROLL FOR NEXT