முகப்பு
இந்தியா

படிப்பறிவில்லாத குஜராத் மக்கள்: கார்கே வருத்தம்!

குஜராத் மக்கள் படிப்பறிவில்லாதவர்கள் எனக் கூறியதற்கு மன்னிப்புகோரிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருத்தம்

Updated On : 8 ஏப்ரல் 2026, 3:04 pm IST
மல்லிகார்ஜுன கார்கே - X | Congress
பகிர்:

குஜராத் மக்களை கல்வியறிவு இல்லாதவா்கள் என்று பேசியதற்காக காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வருத்தம் தெரிவித்தாா். மேலும், குஜராத்திகள் மீது பெரும் மதிப்பு வைத்துள்ளேன் என்றும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கேரளத்தில் தோ்தல் பிரசாரத்தின்போது நான் பேசிய கருத்துகள் வேண்டுமென்றே தவறாக அா்த்தப்படுத்தப்பட்டுவிட்டன. இருந்தபோதிலும், அதற்காக எனது மனமாா்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத் மக்களின் உணா்வுகளைப் புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அவா்கள் மீது நான் எப்போதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன்’ என்று கூறியுள்ளாா்.

கடந்த 5-ஆம் தேதி கேரளத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட காா்கே, ‘குஜராத் மக்கள் கல்வியறிவு இல்லாதவா்கள் என்பதால் அவா்களை பிரதமா் மோடி நன்கு ஏமாற்றிவிட்டாா். ஆனால், கேரள மக்கள் கல்வியறிவு பெற்றவா்கள். சிறந்த புத்திசாலிகள். அவா்களை பிரதமா் மோடியோ பினராயி விஜயனோ ஏமாற்ற முடியாது’ என்று பேசினாா்.

Advertisement

Advertisement

இதற்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்ததுடன், குஜராத் மக்களிடம் காா்கே மன்னிப்புக் கோர வலியுறுத்தியது. ‘காா்கே கூறிய கருத்தை ராகுல், சோனியா, பிரியங்கா உள்ளிட்டோா் ஏற்றுக் கொள்கிறாா்களா?’ என்று பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத் கேள்வி எழுப்பினாா். இந்தநிலையில், தனது பேச்சுக்காக காா்கே வருத்தம் தெரிவித்துள்ளாா்.

summary

Congress President Mallikarjun Kharge expresses regret over 'illiterate' remark, says he has highest of respect for Gujaratis

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.