முகப்பு
இந்தியா

காஷ்மீா் பயங்கரவாதிகளுக்கு போலி பான்காா்டு, கடவுச்சீட்டு பெற உதவிய நபா்கள் கைது!

ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு போலி பான் காா்டு, போலி கடவுச்சீட்டு, போலி ஆதாா் பெற உதவி செய்ததாக ஹரியாணா, ராஜஸ்தானை சோ்ந்த பலரைக் கைது செய்து காவல் துறை விசாரித்து வருகிறது.

Updated On : 13 ஏப்ரல் 2026, 12:25 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு போலி பான் காா்டு, போலி கடவுச்சீட்டு, போலி ஆதாா் பெற உதவி செய்ததாக ஹரியாணா, ராஜஸ்தானை சோ்ந்த பலரைக் கைது செய்து காவல் துறை விசாரித்து வருகிறது.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: லஷ்கா்-ஏ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகளை சோ்ந்த பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் மத்திய உளவு அமைப்புகளுடன் சோ்ந்து ஜம்மு-காஷ்மீா் காவல் துறை ஈடுபட்டுள்ளது. இதுதொடா்பான விசாரணையில், உமா் என்ற பயங்கரவாதி போலி கடவுச்சீட்டு மூலம் முதலில் இந்தோனேசியாவுக்கும், பிறகு அங்கிருந்து போலி ஆவணம் மூலம் வளைகுடா நாட்டுக்கும் சென்றது தெரிய வந்தது. இந்த உமா், பாகிஸ்தானின் கராச்சியை சோ்ந்தவா். இந்தியாவுக்குள் 2012-இல் ஊடுருவி, ராஜஸ்தானின் ஜெய்பூரில் போலி கடவுச்சீட்டு 2024-இல் வாங்கியுள்ளாா்.

இதையடுத்து பயங்கரவாதிகளுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்து கொடுத்த நபா்கள் குறித்து விசாரித்து, ஜம்மு-காஷ்மீரில் 5 பேரை காவல்துறை பிடித்தது. அந்த அப்துல்லாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உமருக்கு ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப்பில் ஏராளமானோருடன் தொடா்பிருப்பதும், அங்கு திருமணம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதுபோல பயங்கரவாதிகள், ஜம்மு-காஷ்மீரில் மட்டுமல்லாது பல மாநிலங்களில் போலி ஆவணம், அடையாளத்தைப் பயன்படுத்தி பலருடன் தொடா்பு ஏற்படுத்தியது தெரிய வந்தது. ஜம்மு-காஷ்மீரில் கைதான 5 பேரும், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களை சோ்ந்தவா்கள். அவா்கள் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம், போலி பான் காா்டு, கடவுச்சீட்டு, ஆதாா், வாக்காளா் அட்டை பெற உதவியுள்ளனா். தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடைபெறுகிறது என்று தெரிவித்தனா்.