அஸ்ஸாமில் ஆட்சியைப் பிடிப்பது யார்? கருத்துக் கணிப்பு வெளியானது!
அஸ்ஸாம் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது குறித்த கருத்துக் கணிப்புகள் வெளியாகின.
அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை (ஏப். 9) அன்று நடைபெற்றது. 126 பேரவைத் தொகுதிகளுக்கு, 2.5 கோடி வாக்காளர்களைக் கொண்ட அஸ்ஸாமில் 85.91 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
முதல் கருத்துக் கணிப்பாக ஜேசிவி வெளியிட்டது. அதில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
ஜேசிவி கருத்துக் கணிப்பு
அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 88 - 101 இடங்களைக் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 23 - 33 இடங்களைக் கைப்பற்றும் என்றும் ஜேவிசி கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 02 - 02 இடங்களிலும் பிற வேட்பாளர்கள் அதிகபட்சமாக 03 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.