2 மாதத்துக்குள் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் மீண்டும் போராட்டம்! ஜார்க்கண்ட் அரசுக்கு மாணவர்கள் எச்சரிக்கை!
2 மாதத்துக்குள் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம் என ஜார்க்கண்ட் அரசுக்கு மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பற்றி...
2 மாதத்துக்குள் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம் என ஜார்க்கண்ட் அரசுக்கு மாணவர்கள் புதன்கிழமை (ஆக.19) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (பிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வு, ஜேஎஸ்எஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள்கள் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி, 3 வாரங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்தக் கூட்டத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டுமுதல் டிஎஸ்ஆர் டேட்டா பிராஸஸ்ஸிங் நிறுவனம் என்ற ஒப்பந்த நிறுவனம் மூலம், மாநிலத்தில் நடத்தப்பட்ட அனைத்து வேலைவாய்ப்புத் தேர்வுகள், ஜேஎஸ்எஸ்சி - சிஜிஎல் தேர்வு ஆகியவற்றை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இதனால், மாணவர்கள் தங்களது போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.
இதுகுறித்து மாணவர் தலைவர் ரவீந்திர பஸ்வான் இன்று பேசியதாவது:
அரசுப் பணியாளர் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் அதனைக் கைவிட்டதோடு, இந்தப் பிரச்னைகளை தீர்க்க ஜார்க்கண்ட் அரசுக்கு இரண்டு மாதங்கள் கால அவகாசம் கொடுத்துள்ளனர்.
ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் அரசை, 26 நாள்கள் மாணவர் போராட்டம், 22 தேர்வுகளை ரத்து செய்ய நிர்பந்தித்தது. இரண்டு மாதங்களுக்குள் இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிட்டால், நாங்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம் என்று தெரிவித்தார்.
Students warned the Jharkhand government on Wednesday (August 19) that they would resume protests if the issue is not resolved within two months.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.