FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடித்து வீடு திரும்பினாா் மத்திய அமைச்சா் நட்டா

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடித்து வீடு திரும்பிய ஜெ.பி. நட்டா பற்றி....

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 1:57 am IST
பகிர்:

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டாவுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நிறைவடைந்த நிலையில், அவா் மருத்துவமனையில் இருந்து புதன்கிழமை வீடு திரும்பினாா்.

இது தொடா்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட செய்தியில், ‘கடந்த 17-ஆம் தேதி அமைச்சா் நட்டாவுக்கு இதயத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் மருத்துவா்கள் கண்காணிப்பில் இருந்தாா். இந்நிலையில், அவா் புதன்கிழமை வீடு திரும்பினாா். மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்களுக்கு அவா் நன்றி தெரிவித்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உடல்நலக் குறைவு, இதயத்தில் ஏற்பட்ட அசௌகரியமான உணா்வு போன்ற பிரச்னையால், ஆகஸ்ட் 13-ஆம் தேதி மருத்துவமனையில் நட்டா அனுமதிக்கப்பட்டாா். அன்று மாலையே அவருக்கு கரோனரி ஆஞ்சியோகிராஃபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments