மோடி பயந்துவிட்டார்; அதனால்தான் இன்று அவைக்கு வரவில்லை: பிரியங்கா காந்தி
பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்திற்கு வராதது குறித்து பிரியங்கா காந்தி கருத்து...
பிரதமர் மோடி பயந்துவிட்டார், அதனால்தான் அவர் இன்று நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
சீன ஆக்கிரமிப்பு குறித்து கடந்த திங்கள்கிழமை மக்களவையில் பேசத் தொடங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேசவிடாமல் ஆளும் கட்சியினர் தடுத்ததால் அவையில் அமளி ஏற்பட்டது.
முன்னாள் ராணுவத் தளபதி நரவணே எழுதிய புத்தகத்தில் உள்ள எல்லைப் பிரச்னை குறித்து ராகுல் குறிப்பிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து இன்று ராகுல் காந்தி, 'பிரதமர் மோடி அவைக்கு வரும்போது அவரிடம் நரவணே எழுதிய புத்தகத்தைக் கொடுப்பேன். அவர் புத்தகத்தில் படித்தாவது தெரிந்துகொள்ளட்டும்' என்று கூறியிருந்தார்.
ஆனால், இன்று மாலை 5 மணியளவில் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மக்களவையில் பேசவிருந்த நிலையில் அவர் அவைக்கு வரவில்லை. மக்களவை நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் இதுபற்றி கூறுகையில்,
"பிரதமரிடம் கேளுங்கள், அவர் ஏன் இன்று வரவில்லை எனக் கேளுங்கள். இது நாடாளுமன்றமா அல்லது வேறு ஏதேனும் மையமா? பாஜக அரசு நாடாளுமன்றத்தை ஒரு கேலிக்கூத்தாக்க முயற்சிக்கிறது. நாங்கள் இதையெல்லாம் அனுமதிக்கப் போவதில்லை" என்றார்.
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி இதுதொடர்பாக பதில் அளிக்கையில்,
"பிரதமர் மோடி பயந்துவிட்டார், அதனால்தான் அவர் இன்று அவைக்கு வரவில்லை. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவும் ஒரு புல்லட் ரயில்போல ஓடிவிட்டனர்" என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி மக்களவைக்கு வராததற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
MP Priyanka Gandhi Vadra says, PM Modi got scared and that's why he did not arrive at the house
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.