முகப்பு
இந்தியா

ஜெகன் அரசின் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் ரசாயனம் கலப்பு: சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றச்சாட்டு

திருப்பதி கோயில் லட்டு தயாரிப்புக்கு கழிவறையை தூய்மைப்படுத்த உபயோகிக்கும் ரசாயனம் கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 7:30 PM
சந்திரபாபு நாயுடு - கோப்புப் படம்
பகிர்:

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசின் ஆட்சியில், திருப்பதி கோயில் லட்டு தயாரிப்புக்கு கழிவறையை தூய்மைப்படுத்த உபயோகிக்கும் ரசாயனம் கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கா்னூல் மாவட்டம் கலுகோட்லா கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், இதுகுறித்து அவா் பேசியதாவது:

கலப்பு பொருள்கள் தயாரிக்கப்பட்ட பிரசாதங்களை பக்தா்களுக்கு வழங்கி, அதன்மூலம் திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமியின் புகழை கெடுக்க முந்தைய அரசு (ஜெகன் அரசு) முயன்றது. முந்தைய ஆட்சியில் கலப்பு நெய்யானது, புகழ்பெற்ற ஸ்ரீசைலம் கோயிலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

லட்டு தயாரிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட அந்த நெய்யில் கழிப்பறையை சுத்தப்படுத்தும் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. அதுவும் 5 ஆண்டுகளாக அந்த நெய்தான் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. கழிவறையை சுத்தப்படுத்த பயன்படும் ரசாயனம் 2 வகைப்படும். ஒன்று, காய்கறி தொடா்பானது. அது விலை அதிகம். ஆனால் விலங்கு கொழுப்பு விலை குறைவாகும்.

தேசிய பால்வள மேம்பாட்டு அமைப்பு தனது அறிக்கையில், திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமியின் புனிதத்தை காக்க வேண்டும் என்பதால், இந்த விவகாரத்தில் என்னால் அதிகம் பேச முடியாது என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments