காட்டு யானை படையப்பா.  
இந்தியா

மூணாற்றில் காரை தாக்கிய காட்டு யானை: காயமின்றி தப்பிய இருவர்!

மூணாற்றில் சாலையில் சென்றுகொண்டிருந்த காரை காட்டு யானை தாக்கியதில் அதில் பயணித்த இருவர் காயமின்றி தப்பினர்.

இணையதளச் செய்திப் பிரிவு

மூணாற்றில் சாலையில் சென்றுகொண்டிருந்த காரை காட்டு யானை தாக்கியதில் அதில் பயணித்த இருவர் காயமின்றி தப்பினர்.

கேரள மாநிலம், மூணாறு-மறையூர் சாலையில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் காட்டு யானை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியது. யானை, முதலில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பேருந்தை நெருங்கி அதன் பக்கவாட்டு கண்ணாடிகளில் ஒன்றை உடைத்தது. பின்னர் அது சாலையில் சென்ற காரை தடுத்தது.

பின்னர் காரின் முன்பக்கக் கண்ணாடியை யானை உடைத்ததோடு மேற்கூரையையும் சேதப்படுத்தியது. இந்த சம்பவத்தின்போது மற்றொரு பயணியுடன் ஓட்டுநரும் உள்ளேயே இருந்ததால் காயமின்றி தப்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வனத் துறைக்கு தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்தது.

படையப்பா என்று அழைக்கப்படும் காட்டு யானை இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்தப் பகுதியில் அடிக்கடி சுற்றித் திரியும் யானை படையப்பாவின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வன அதிகாரிகள் கூறினர்.

A car was damaged after a wild elephant attacked vehicles on the Munnar-Marayoor road, forest officials said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 15-02-2026

தாய் சேய்க்கு ஆற்றும் உதவி!

இலக்கியங்களில் சுற்றுச்சூழல்

திராவிட மொழியியல் சிற்பி

எல்லாம் சேர்ந்ததுதான் உடல்

SCROLL FOR NEXT