கோப்புப் படம் 
இந்தியா

மார்ச் 31-க்குள் 300 நக்சல்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரம்!

மார்ச் 31-க்குள் 300 நக்சல்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய அரசு விதித்துள்ள காலக்கெடு முடிவதற்குள் 300 நக்சல்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள நக்சல்கள் அனைவரும் வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது. இதையடுத்து, அதற்கான நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர், தெலங்கானா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இயங்கி வரும் நக்சல்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளன.

இதன்மூலம், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவர்களான மிசிர் பெஸ்ரா (எ) பாஸ்கர், தேவ்ஜி (எ) கும்பா தாதா, ராமண்ணா (எ) கணபதி மற்றும் மல்லா ராஜ ரெட்டி (எ) சாகர் ஆகியோரைத் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் தேவ்ஜி மற்றும் அவரது கூட்டாளியான கேசா சோதி ஆகியோர் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 17) மாபெரும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மல்லா ராஜ ரெட்டியை தவிர மற்ற நக்சல் தளபதிகள் ஒடிசாவின் வனப்பகுதிக்குள் பதுங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களைப் பிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, முக்கிய தலைவர்கள் 4 பேர் உள்பட சுமார் 300 நக்சல்கள் தற்போது தேடப்பட்டு வருகின்றனர். இதனால், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அவர்கள் அனைவரும் சரணடைய வேண்டும் அல்லது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் அவர்கள் கொல்லப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

security forces are carrying out operations to eliminate 300 Naxalites, including 4 senior commanders, before the deadline set by the central government expires.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்!

"விடுதிகளுக்கு AC வசதி!" விளையாட்டு வீரரின் வேண்டுகோளுக்கு துணை முதல்வர் தந்த பதில்!

சர்வதேச விளையாட்டு நகரம்!அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்!

பஞ்சாபில் தொடரும் அவலம்! மற்றொரு ஆளுங்கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை!

ஏஐ பயன்பாடு : பூடான் பிரதமரை சந்தித்துப் பேசிய மோடி!

SCROLL FOR NEXT