நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!
நாட்டில் அதிவேக மெட்ரோ ரயில் சேவையான நமோ பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று மீரட்டில் தொடங்கி வைக்கவிருப்பதைப் பற்றி...
நாட்டில் அதி விரைவு மெட்ரோ ரயில் சேவையான நமோ பாரத் ரயில் சேவை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.22) தொடங்கி வைக்கவிருக்கிறார்.
நாட்டில் முதல்முறையாக குஜராத்தின் அகமதாபாத் - புஜ் நகரங்களுக்கு இடையே ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ சேவையை பிரதமர் மோடி கடந்த 2024 ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.
அதேபோன்று, உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சதாப்தி நகர் நமோ பாரத் ரயில் நிலையத்தில் இருந்து தில்லி-காஜியாபாத் - மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் மீதமுள்ள 27 கி.மீ. நீளப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
Advertisement
Advertisement
இது தில்லி மற்றும் மீரட்டை இணைக்கும் இந்தியாவின் முதல் முழுமையாக செயல்படும் 82.15 கி.மீ. கொண்ட மெட்ரோ ரயில் பாதையாகும். தில்லி–காஜியாபாத்–மீரட் நமோ பாரத் வழித்தடத்தில் மொத்தம் 16 நிலையங்கள் உள்ளன. அவற்றில் தற்போது 11 நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
மதியம் மீரட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி, நமோ பாரத் ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து மீரட் தெற்கு மெட்ரோ ரயில் நிலையம் வரை அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பிற்பகல் 1 மணியளவில், மீரட்டில் சுமார் ரூ.12,930 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து விழாவில் உரையாற்றுகிறார்.
சுமார் 82 கி.மீ. நீளமுள்ள தில்லியில் இருந்து மீரட் நமோ பாரத் வழித்தடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தியாவின் முதல் நமோ பாரத் விரைவு ரயிலானது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் இந்தியாவின் முதல் ரயில் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இது சாஹிபாபாத், காஜியாபாத், மோடிநகர் மற்றும் மீரட் போன்ற முக்கிய நகர்ப்புற மையங்களை தில்லியுடன் இணைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
PM Narendra Modi will inaugurate the remaining sections of India's first Namo Bharat RRTS, which include the 5-km section between Sarai Kale Khan and New Ashok Nagar in Delhi and the 21-km section between Meerut South and Modipuram.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.