வயநாடு நிலச்சரிவு: 5-வது நாளாக தொடரும் மீட்பு பணி: ஒருவர் காணவில்லை!
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரைத் தேடும் பணி நீடிப்பு பற்றி..
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரைத் தேடும் பணி தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடைபெற்று வருகின்றது.
வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் நோக்கிலான ஆனக்கோம்பொயில்-மேப்பாடி சுரங்கப் பாதை திட்டப் பணி நடைபெறும் இடத்தில் கடந்த ஜூலை 7-ஆம் தேதி இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை ஏழு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எட்டாவது நபர் ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த கட்டுமான மேலாளர் விக்ரம் ரானாவை தேடும் பணி தொடர்ந்து வருகின்றது.
தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதால், மீனாட்சி பாலம் வழியாகச் சூரல்மலை-மேப்பாடி பகுதிக்குச் செல்லும் வாகனங்களுக்கு (அத்தியாவசிய சேவைகளைத் தவிர) போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
மேலும், அந்தப் பாதையில் இரு திசைகளிலும் செல்லும் வாகனங்கள் இரண்டு மணி நேர இடைவெளியில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல்துறையின் சிறப்புச் செயல்பாட்டுக் குழு, தீயணைப்புத் துறை மற்றும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த குழுக்களால் இந்தத் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Search operations continued on Saturday for the fifth day since the July 7 landslide at the tunnel project site in Kalladi here which has claimed seven lives with one person still missing.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.