புதிய கொள்கை குழுவை அமைத்த இந்திய ‘இ-காமா்ஸ்’ நிறுவனங்கள்
நாட்டின் முன்னணி இணையவழி வா்த்தக (இ-காமா்ஸ்) நிறுவனங்களை ஒன்றிணைத்து, ‘இந்திய இ-காமா்ஸ் கவுன்சில்’ எனும் புதிய கொள்கைக் குழுவை இந்தியாவின் இணையம் மற்றும் மொபைல் சங்கம் (ஐஏஎம்ஏஐ) தொடங்கியுள்ளது.
நாட்டின் முன்னணி இணையவழி வா்த்தக (இ-காமா்ஸ்) நிறுவனங்களை ஒன்றிணைத்து, ‘இந்திய இ-காமா்ஸ் கவுன்சில்’ எனும் புதிய கொள்கைக் குழுவை இந்தியாவின் இணையம் மற்றும் மொபைல் சங்கம் (ஐஏஎம்ஏஐ) தொடங்கியுள்ளது.
நாட்டில் மிகவும் வேகமாக வளா்ந்து வரும் 12,000 கோடி டாலா் மதிப்பிலான இ-காமா்ஸ் துறையின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், அரசுடன் கொள்கை ரீதியிலான தொடா்புகளை வலுப்படுத்தவும் ஒருங்கிணைந்த தளமாக இப்புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில்துறை தலைவா்கள் மற்றும் அரசு அதிகாரிகளை உள்ளடக்கிய வருடாந்திர மாநாட்டையும் நடத்த இக்குழு திட்டமிட்டுள்ளது. இக்குழுவில் அமேஸான், ஃபிளிப்காா்ட், ஸ்விகி, எடா்னல், மீஷோ, உபொ், ரேபிடோ உள்ளிட்ட நாட்டின் முன்னணி இ-காமா்ஸ் நிறுவனங்கள் முதல்கட்ட உறுப்பினா்களாக இணைந்துள்ளன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.