கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் 45 ஆண்டுகளுக்குப் பின்.. நிரபராதி என விடுதலை!
ஆயுள் தண்டனை பெற்று 45 ஆண்டுகளுக்குப் பின் ஒருவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டது குறித்து..
சரியான நேரத்தில் வழங்கப்படாத நீதிக்கு மறுக்கப்பட்டதற்கு சமம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த 1977-ஆம் ஆண்டில் நடந்த கொலை வழக்கில், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபர், 2026ஆம் ஆண்டில் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
கொலை வழக்கில், கடந்த 1981ஆம் ஆண்டு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 2026ல் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 1977ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில், மூன்று பேர் குற்றவாளிகள் என 1981ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நேற்று ஆயுள் தண்டனை பெற்றவர் நிரபராதி என விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டது. 45 ஆண்டுகாலமாக விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
Advertisement
Advertisement
குற்றவாளிகள் என தண்டனை பெற்ற 3 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விசாரணையின்போதே 2 பேர் இறந்துவிட்ட நிலையில், ஒருவர் சிறையில் இருந்தார்.
வழக்குத் தொடரப்பட்டதில் உள்ள குறைபாடுகளை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு சாதகமாக அளித்து ஆயுள் தண்டனை பெற்றிருந்த ஹிரால் லாலை விடுதலை செய்திருக்கிறது.
வழக்கில், சாட்சியங்களின் வாதத்தையும் ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கற்பனை அல்லது ஊகம் என்று ஒதுக்கித் தள்ளியிருக்கிறது.
கடந்த 1977ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி பிற்பகலில் நடந்த கொலைச் சம்பவத்தில், சாட்சியங்கள் என்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர்கள், உண்மையில் கொலை நடந்த போது, அங்கே இருந்தார்களா என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை. குற்றத்தை உறுதி செய்யும் வகையில் சாட்சிகள், ஆதாரங்கள் இல்லாததால், குற்றவாளி என தண்டனை பெற்றவரை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றமும், சாட்சியங்களிடம் இருக்கும் குறைபாடுகளை கவனிக்கத் தவறிவிட்டன என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.