மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி! சிஜேபி - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு
மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி! சிஜேபி - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு பற்றி..
நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல, ஜந்தர் - மந்தர் நோக்கி ஏராளமான இளைஞர்களும், மாணவர்களும் வந்துகொண்டிருக்கும் நிலையில், தடுப்புகளை மீறி பேரணி செல்ல முயன்ற சிஜேபியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் நோக்கி இன்று காலை அமைதிப் பேரணியைத் தொடக்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை அகற்றியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
ஜந்தர் - மந்தர் பகுதியை இணைக்கும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் போராட்டத்தில் பங்கேற்க ஏராளமான மாணவா்கள், பெற்றோா்கள் ஜந்தர் மந்தர் நோக்கி வந்து கொண்டிருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் சிஜேபி போராட்டம் நடத்தி வருகிறது.
போராட்டக் களத்துக்குள் வெளியிலிருந்து யாரும் செல்லவும் முடியாமல், போராட்டக் களத்திலிருந்து யாரும் வெளியேறவும் முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Students and youth march towards Parliament! Scuffle between CJP and police.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.