தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டத் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட ‘பொதுத் தோ்வு முறைகேடுகளைத் தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026’ மீதான விவாதம் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது.
இன்றும் விவாதம் தொடர்ந்த நிலையில், பிற்பகல் 3 மணியளவில், குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவை உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ‘பொதுத் தோ்வு முறைகேடுகளைத் தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026’ நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.