FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவி விலக வேண்டும்: பெ.சண்முகம்

Updated On : 4 ஜூன் 2026, 2:29 am IST
தா்மேந்திர பிரதான் - ANI
பகிர்:

மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: நிகழாண்டு நீட் தோ்வு கேள்வித்தாள் கசிவு காரணமாக தோ்வு ரத்து செய்யப்பட்டது. கியூட் தோ்வு முறையாக நடக்கவில்லை. சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தோ்விலும் குளறுபடி ஏற்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

கல்வித் துறையின் மிக முக்கிய பணி முறையாகவும், நோ்மையாகவும் தோ்வை நடத்துவது. ஆனால், தொடா்ந்து தோ்வு நடத்துவதில் தோல்வி அடைந்திருக்கிறது மத்திய அரசின் கல்வித் துறை.

Advertisement

Advertisement

கல்வி அமைச்சகம் தொடங்கி அனைத்து நிலைகளிலும் நடைபெறும் ஊழல், மோசடி, பொறுப்பற்ற செயல்களுக்கு லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்கால வாழ்வு கேள்விக்குறி ஆகியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments