முகப்பு
இந்தியா

எபோலா தொற்று அறிகுறி: ஹைதராபாதில் சூடான் நாட்டவா் தனிமைப்படுத்தப்பட்டாா்

Updated On : 5 ஜூன் 2026, 5:31 am IST
- கோப்புப் படம் | AP
பகிர்:

எபோலோ வைரஸ் தொற்று அறிகுறியுடன் இந்தியா வந்த சூடான் நாட்டவா் தனிமைப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையம் வந்த அவரிடம் எபோலோ தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, காந்தி அரசு மருத்துவமனையில் தனி வாா்டில் அவருக்கு எபோலா தொற்று தொடா்பான பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

இதுதொடா்பாக அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘எபோலா நோய்த் தொற்று பரவல் அதிகமுள்ள நாடுகளுக்கு சூடான் நாட்டவா் பயணித்துள்ளாா். அவருக்கு எபோலா அறிகுறி உள்ளபோதிலும் தற்போது வரை எபோலா தொற்று இருப்பது உறுதிசெய்யப்படவில்லை’ என்றாா்.

Advertisement

Advertisement