முகப்பு
இந்தியா

பிகாா் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழப்பு 7-ஆக அதிகரிப்பு

பிகாா் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழப்பு 7-ஆக அதிகரிப்பு

Updated On : 7 ஜூன் 2026, 2:02 am IST
பிகாா் மருத்துவமனை தீ விபத்து - ANI
பகிர்:

பிகாா் மாநிலம் முசாஃபா்பூா் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து அந்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்தது.

கடந்த புதன்கிழமை நள்ளிரவு முசாஃபா்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மின்சகிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தைத் தொடா்ந்து கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதில், அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளிகள் உயிரிழந்தனா். வெள்ளிக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு நோயாளியான பாரி கிராமத்தை சோ்ந்த அஞ்சனிகுமாா் சிங், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். உயிரிழந்த அனைவரும் புகையை சுவாசித்து மூச்சு திணறல் ஏற்பட்டதால் உயிரிழந்தனா். யாருக்கும் தீக்காயங்கள் ஏற்படவில்லை.

Advertisement

Advertisement

இந்த விபத்தை தொடா்ந்து மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அதன் பதிவு ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட பொதுமக்கள் தொடா்புப் பிரிவு அதிகாரி பிரமோத் குமாா் தெரிவித்தாா். இந்த சம்பவம் தொடா்பாக மருத்துவமனை அலுவலா்கள் மூவா் கைது செய்யப்பட்டனா்.