தெலங்கானா: அரசு மருத்துவமனைகளில் சர்வதேச மருத்துவ சேவை - உயர்நிலை ஆய்வுக் குழு அமைப்பு
தெலங்கானா: அரசு மருத்துவமனைகளில் உலகத் தரத்திலான மருத்துவ சேவை - உயர்நிலை ஆய்வுக் குழு அமைத்து உத்தரவு
தெலங்கானா: அரசு மருத்துவமனைகளில் உலகத் தரத்திலான மருத்துவ சேவை வழங்குவது பற்றி ஆய்வு செய்ய உயர்நிலைக் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது.
இது குறித்து, தெலங்கானா மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சி. தாமோதர் ராஜநரசிம்மா எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் : “தரமான மற்றும் குறைந்த செலவின சுகாதார சேவைக்கான ஓர் உலகளாவிய முனையமாக தெலங்கானா முன்னோக்கிச் செல்ல ஆயத்தமாகி வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் சர்வதேச மருத்துவச் சுற்றுலாவை முன்னிலைப்படுத்த மாநில அரசு ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. இதன்மூலம், உலகத் தரத்திலான நோயாளிகள் சேவையும் உலகளாவிய தொடர்பும் மருத்துவத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதிநவீன உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சைகள் தொடங்கி சிறப்பு கவனம் தேவைப்படும் மருத்துவச் சேவை வரை, தெலங்கானாவின் பொது சுகாதார நிறுவனங்கள் புதிய நிலைகளை எட்டுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறந்த சிகிச்சை வழங்குவதை இந்தத் திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.