திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிக்கு செருப்பு மாலை அணிவித்த கிராம மக்கள்!
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிக்கு மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிக்கு மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.
மேற்கு வங்கத்தின் ஹௌரா மாவட்டத்தில் அமர்ஹதா கிராமத்தைச் சேர்ந்த சன்னாஷி மன்னா என்ற திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி, அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பயனாளிகளிடமிருந்து பணம் பறித்ததாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்ட திட்டத்துடன் தொடர்புடைய பலரின் ஆதார் அட்டைகள் மற்றும் வேலை அட்டைகள் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, அந்த நபரை மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்து, கயிற்றால் கட்டி கிராம மக்கள் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். இதுதொடர்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் தலையிட்டு அந்த நபரை மீட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
கிராம மக்களிடமிருந்து அவரை மீட்டதாகக் கூறிய காவல்துறையினர் அவர் மீது முறைப்படி எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர். மேலும், அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினர். இந்த விடியோவின் நம்பகத்தன்மை பற்றி சரிபார்க்க முடியவில்லை.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது பொதுமக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Trinamool Congress functionary paraded wearing a garland of slippers in West Bengal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.