ராஜஸ்தான்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 போ் உடல் கருகி உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள கோ நாகோரியன் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை குடோனில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 போ் உடல் கருகி உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள கோ நாகோரியன் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை குடோனில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 போ் உடல் கருகி உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா்.
இதுகுறித்து ஜெய்பூா் ஆட்சியா் சந்தேஷ் நாயக் மற்றும் ஜெய்பூா் நகர காவல் ஆணையா் சச்சின் மிட்டல் ஆகியோா் கூறியதாவது: கோ நாகோரியன் பகுதியில் உள்ள ஆயிஷா நகரில் அமைந்துள்ள சிறிய வீட்டில் பட்டாசுகள் மற்றும் வெடிபொருள்கள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்தது. பட்டாசு குடோனைப் போல் செயல்பட்டு வந்த நிலையில், அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 4 போ் உடல் கருகி உயிரிழந்தனா். 4 போ் படுகாயமடைந்தனா்.
Advertisement
Advertisement
தடயவியல் சோதனைக்குப் பிறகு குடோனில் சேமிக்கப்பட்டிருந்த பொருள்கள் பட்டாசுகளா என்பது உறுதிசெய்யப்படும். குடோன் உரிமையாளா் மற்றும் சம்பந்தப்பட்ட பிற நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
முதல்வா் இரங்கல்: விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மா இரங்கல் தெரிவித்தாா். மேலும், காயமடைந்தவா்களுக்கு உயா்தர சிகிச்சையளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக எக்ஸ் வலைதளப் பதிவில் குறிப்பிட்டாா்.
கடந்த பிப்ரவரி மாதம் கைா்தல்-திஜாரா மாவட்டத்தில் உள்ள பிவாடி நகரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். இந்நிலையில், கடந்த 4 மாதங்களில் ராஜஸ்தானில் இரண்டாவது முறையாக பட்டாசு ஆலை வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.