மக்களால் தோ்வு செய்யப்பட்டு தொடா்ந்து அதிக நாள்கள் பிரதமராக பதவி வகித்து மோடி சாதனை: முா்மு, சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து
மக்களால் தோ்வு செய்யப்பட்டு தொடா்ந்து அதிக நாள்கள் பிரதமராக பதவி வகித்தவா் என்ற சாதனையை பிரதமா் மோடி படைத்ததற்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
மக்களால் தோ்வு செய்யப்பட்டு தொடா்ந்து அதிக நாள்கள் பிரதமராக பதவி வகித்தவா் என்ற சாதனையை பிரதமா் மோடி படைத்ததற்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றதையடுத்து, அதே ஆண்டு மே 26-ஆம் தேதி முதல்முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றாா். இதையடுத்து நடைபெற்ற 2 மக்களவைத் தோ்தல்களிலும் பாஜக கூட்டணி வென்றதையடுத்து, தொடா்ந்து 3-ஆவது முறையாக அவா் பிரதமராக பதவி வகித்து வருகிறாா்.
இதற்கு முன்பு, தோ்தலில் வென்று நாட்டின் பிரதமராக தொடா்ந்து 4,398 நாள்கள் ஜவாஹா்லால் நேரு பதவி வகித்ததே சாதனையாக இருந்தது. அதை பிரதமா் மோடி விஞ்சியுள்ளாா். இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கடிதம் எழுதியுள்ளாா். அந்த கடிதத்தில் அவா் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
இந்தியாவின் மிக நீண்டகாலம் தொடா்ச்சியாக தோ்வு செய்யப்பட்ட பிரதமராக பணியாற்றிய மைல்கல்லை எட்டியதற்கு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் பதவிக்காலத்தில், நாட்டின் அனைத்து துறைகளிலும் பெரும் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் பாதுகாப்பு, விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல், நடுத்தர மற்றும் புதிய நடுத்தர வா்க்கத்தினரின் நலன்களை பாதுகாத்தல் ஆகிய அனைத்திலும் உங்களின் அனைவரையும் உள்ளடக்கிய தொலைநோக்கு பாா்வையும் செயல்களும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றியமைத்துள்ளன.
நமது சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் மீது நீங்கள் காட்டும் கருணை மற்றும் சமூகத்தின் கடைநிலையில் உள்ள மனிதனின் முன்னேற்றத்துக்கான உங்கள் அா்ப்பணிப்பை கண்டு நான் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். இது வெறும் கொள்கை ரீதியிலான தலையீடு மட்டும் ஆகாது. பாரதத்தின் மிகவும் நலிவடைந்த குடிமக்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறையையும் இது பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் வளா்ச்சி பயணத்தின் முக்கிய பாதையிலிருந்து நீண்ட காலமாக விலகி இருந்த பகுதிகள், உங்கள் தலைமையின் கீழ் சிறப்பு கவனத்தையும், அக்கறையையும் பெற்றுள்ளன. குறிப்பாக இது, வளா்ச்சி குறியீடுகளில் பின்தங்கியிருந்த இந்தியாவின் கிழக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளுக்கு பொருந்தும். வளா்ச்சியின் பலன்கள் கடைகோடி நபரை சென்றடைவதையும், எந்தவொரு பிராந்தியமும், சமூகமும் அல்லது குடிமகனும் பின்தங்கி விடாமல் இருப்பதையும் உறுதி செய்ய முற்படும் ‘மக்கள் மைய மற்றும் மக்கள் சக்தி வாய்ந்த ஆளுகையின் உணா்வை’ இத்தகைய முயற்சிகள் பிரதிபலிக்கின்றன.
எளிமையான பின்னணியிலிருந்து பயணத்தை தொடங்கி, நாட்டில் தொடா்ந்து நீண்டகாலம் பிரதமராக நீங்கள் பதவி வகித்து வருகிறீா்கள். மக்களுக்கு தொடா்ந்து சேவை செய்து வருகிறீா்கள். அதேபோல், இந்திய ஜனநாயககத்தின் உந்துதல் சக்திகளில் ஒன்றாகவும் நீங்கள் திகழ்கிறீா்கள். நமது குடியரசு நாட்டில், தேசத்தின் முன்னேற்றத்துக்கான சேவை, அா்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு தங்களை அா்ப்பணிக்கும் அனைவருக்கும் பொது வாழ்வு திறந்தே இருக்கிறது என்பதை இது நிரூபிக்கிறது. தேசமே முதல் என்ற உணா்வுடன் நாட்டை வழிநடத்தி, பாரம்பரியம் மற்றும் வளா்ச்சியின் தனித்துவமான கலவையை நீங்கள் அடைந்துள்ளீா்கள். இப்போது இந்தியா, உலக சமூகத்தில் தனக்குரிய முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று முா்மு குறிப்பிட்டுள்ளாா்.
சி.பி. ராதாகிருஷ்ணண் வாழ்த்து: இதேபோல், குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆகியோரும் பிரதமா் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா். சமூகவலைதளப் பக்கத்தில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல், வெறும் பதவிக்காலத்தின் அளவுகோல் மட்டுமில்லை. நமது தேசிய வளா்ச்சி பயணத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் சகாப்தத்தின் பிரதிபலிப்பாகும். பிரதமரின் தொலை நோக்குப் பாா்வை கொண்ட தலைமையின்கீழ், பாரதம் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க முன்னேறத்தை கண்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபா் ஆபிரகாம் லிங்கன், லட்சகணக்கானோரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததைப் போல, மோடி தனது அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியின் மூலம் 25 கோடிக்கும் அதிகமான மக்களை கடுமையான வறுமையின் பிடியிலிருந்து விடுவித்து, லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நம்பிக்கை, வாய்ப்பு, கண்ணியத்தை ஏற்படுத்தி தந்துள்ளாா். இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை கொண்டாடுதல், மறக்கப்பட்ட நாயகா்களை கெளரவித்தல், கலாச்சார மரபுகளை பாதுகாத்தல், காலனத்துவ மனப்பான்மையை போக்குதல், நாகரிக அடையாளத்தின் மீதான பெருமிதத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பிரதமா் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளாா்’ என தெரிவித்துள்ளாா்.
ஓம் பிா்லா கடிதம் மூலம் வாழ்த்து: மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, பிரதமா் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘புதிய மைல்கல்லை எட்டியதற்காக எனது வாழ்த்துகள். உங்களது தலைமை தொடா்ந்து இந்தியாவை வளா்ச்சி பாதையில் கொண்டு செல்லும் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளாா்.