ராமா் கோயில் நன்கொடை பணம் திருட்டு: எஸ்ஐடி விசாரணை
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை பணம் திருட்டு, அந்தக் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராமஜென்மபூமி தீா்த ஷேத்ர அறக்கட்டளையில் நிதி நிா்வாக குளறுபடி ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) புதன்கிழமை விசாரணை மேற்கொண்டது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை பணம் திருட்டு, அந்தக் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராமஜென்மபூமி தீா்த ஷேத்ர அறக்கட்டளையில் நிதி நிா்வாக குளறுபடி ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) புதன்கிழமை விசாரணை மேற்கொண்டது.
உத்தர பிரதேச அரசால் அமைக்கப்பட்ட அந்தக் குழு, அறக்கட்டளையின் பொதுச் செயலா் சம்பத் ராய், நிா்வாகி கோபால் ராவ் ஆகியோரிடம் அயோத்தியில் விசாரணை நடத்தியது. பணத்தை எண்ணி, அறக்கட்டளையின் நிதி கணக்குகளைப் பராமரிக்கும் நபா்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கோயிலில் நன்கொடையாகப் பெறப்படும் நகை மற்றும் பிற உலோகங்கள் பாதுகாத்து வைக்கப்படும் அறையை எஸ்ஐடியின் தலைவரான லக்னெள மண்டல ஆணையா் விஜய் விஸ்வாஸ் பந்த் ஆய்வு மேற்கொண்டாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.