தந்தையர் நாள்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!
தந்தையர் நாளையொட்டி கூகுள் நிறுவனம் வெளியிட்ட சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் குறித்து...
தந்தையர் நாளை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் ஒரு சுவாரஸ்யமான கவன ஈர்ப்புச் சித்திரத்தை(டூடுல்) வெளியிட்டுள்ளது.
உலகின் பிரபல தேடுபொறி தளமான கூகுள் நிறுவனம் முக்கியஸ்தர்களின் பிறந்தநாள், விடுமுறை நாள்கள், முக்கிய தேதிகள் உள்பட சிறப்பு நாள்களில் அனிமேஷன்கள், ஸ்லைடுஷோக்கள், விடியோக்கள் என பல்வேறு வடிவங்களில் வழங்கி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அந்த வகையில் இன்று(ஜூன் 21) தந்தையர் நாளையொட்டி, கூகுள் நிறுவனம் வெளியிட்ட சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இந்த டூடுல், முள்ளங்கி, கேரட் மற்றும் தோட்டக்கலை உபகரணங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தந்தையின் அன்பையும், பாதுகாப்பையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.
தந்தையர் நாள் என்பது தந்தையர்களைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
On the occasion of Father's Day, Google has released an interesting doodle.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.