மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறை
மத்திய கல்வித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌதரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் தொடர்பாக...
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 13,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் மத்திய அரசு பள்ளிகளில் நிரப்பப்படாத ஆசிரியர் பணியிடங்கள் பற்றிய கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌதரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில், “கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8,618 ஆசிரியர் பணியிடங்களும், ஜவஹர் நவோதயா பள்ளிகளில் 5,083 ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளது. புதிய பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் ஓய்வு பெறுவது, ராஜினாமா, பதவி உயர்வு, இடமாற்றம், வேறு துறைக்குச் செல்வது போன்ற காரணங்களால் பணியிடங்கள் அதிகரித்துள்ளன.
Advertisement
Advertisement
பணியிடங்களை நிரப்புவது தொடர்ச்சியான செயல்முறை. அதற்கான விதிமுறைகளை பின்பற்றி காலியிடங்களை நிரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கற்றல் - கற்பித்தல் நடைமுறைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
மாணவர்களுக்கு கற்றல் மீதான ஆர்வத்தில் பாதிப்பு ஏற்படாமல் விரைவில் வழக்கமான ஆசிரியர்களை நியமிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், தொடர்ந்து பல ஆண்டுகளாக கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் மாணவர்கள் அதிக சதவீத மதிப்பெண்களைப் பெற்று வருவதன் மூலம் அந்தப் பள்ளிகளின் தரம் மற்றும் செயல்திறன் முறையாக பின்பற்றப்பட்டு வருவதை அறியமுடியும்” என்று அவர் தெரிவித்தார்.
Over 13,000 teaching posts vacant in KVs, Navodaya schools: Education ministry
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.