பாஜகவுக்கு எதிராக தெருக்கள் - நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதா
பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை தனியொரு நபராக போராடி வருவதாக மமதா பேச்சு...
பாஜகவுக்கு எதிரான தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை தனியொரு நபராக போராடி வருவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று (மார்ச் 26) தெரிவித்தார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக பாஜக செய்துவரும் செயல்கள் குறித்து மாநிலத்தில் வேறு எந்தவொரு அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் (ஏப். 23, 29) நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தேர்தல் பிரசாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே புர்பா பரதமான் பகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர்,
இப்போது அவர்கள் வசிக்கும் மாநிலத்தில் இறைச்சி சாப்பிடக் கூடாது, முட்டை சாப்பிடக் கூடாது, பெங்காலி பேசக் கூடாது என்று அவர்களிடம் சொல்லப்படுகிறது. மேலும், அவர்கள் பெங்காலி பேசினாலும், பவங்கதேசத்தினர்களாகவே கருதப்படுவார்கள்.
இதனால் கைது செய்யப்படுவார்கள், அங்கு தொல்லை செய்யப்பட்டு பின்னர் அவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். எந்தவொரு அரசியல் கட்சிகளும் இதற்கு எதிராகப் போராடவில்லை. தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை தனியொரு நபராகப் போராடி வருகிறேன். யாருடைய பெயர்கள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளது என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது. பாஜகவுக்கு தைரியம் இருந்தால் பட்டியலை வெளியிட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.