பத்தாண்டுகளில் 10,000 மாவோயிஸ்டுகள் சரண்!
கடந்த பத்தாண்டுகளில் 10,000 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தது குறித்து...
கடந்த பத்தாண்டுகளில் 10,000 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு அழுத்தம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகள் நாட்டின் மிக நீண்டகால போராட்டங்களுள் ஒன்றான நக்சல் வாதத்துக்கு ஒரு மரண அடியைக் கொடுத்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் 10,000 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டதோடு அந்த அமைப்பின் உயர்நிலைத் தலைவர்களும் ஒழிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
2014 முதல் 2026 ஆம் ஆண்டின் தொடக்கம் வரையிலான இடதுசாரி பயங்கரவாத அமைப்புகளின் சரணடைவுகள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் 2300 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டனர்.
மேலும் 2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 630 க்கும் மேற்பட்ட போராளிகள் ஆயுதங்களைக் கைவிட்டு பொது வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தனர்.
நாட்டிலிருந்து நக்சல்வாதத்தை ஒழிப்பதற்கான காலக்கெடுவாக மார்ச் 31 ஐ மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.