அஸ்ஸாமில் சஃபாரி ஜீப்பை ஆக்ரோஷமாக தாக்கிய காண்டாமிருகம்: சுற்றுலாப் பயணிகள் அச்சம்
அஸ்ஸாமில் தேசிய பூங்காவில் சஃபாரி ஜீப்பை ஆக்ரோஷமாக தாக்கிய காண்டாமிருகத்தால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அஸ்ஸாமில் தேசிய பூங்காவில் சஃபாரி ஜீப்பை ஆக்ரோஷமாக தாக்கிய காண்டாமிருகத்தால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அஸ்ஸாம் மாநிலத்தில் மனாஸ் தேசிய உயிரியல் பூங்கா உள்ளது. இந்த நிலையில் பூங்காவிற்கு உட்பட்ட பான்ஸ்பரி பகுதியில், வனவிலங்கை காண அழைத்துச்செல்லப்பட்ட சஃபாரி ஜீப்பை நோக்கி ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் ஒன்று ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தது.
பின்னர் நின்றுகொண்டிருந்த ஜீப்பை அந்த காண்டாமிருகம் பலமாகத் தாக்கியது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் உறைந்து போயினர். சுற்றுலாப் பயணிகள் பதற்றத்தில் சப்தமிட, ஜீப்பும் பலமாக குலுங்கியது.
Advertisement
சஃபாரி ஜீப் ஓட்டுநர் மிகுந்த சமயோசிதமாக செயல்பட்டு, வாகனத்தை அந்த ஆக்ரோஷமான காண்டாமிருகத்திடமிருந்து மெதுவாகவும் சாதுரியமாகவும் நகர்த்திச் சென்றார். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பத்திரமாக தப்பினர். இதுகுறித்த விடியோ தற்போது சமூகஊடகங்களில் வெளியாகி, பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.
விலங்குகள் தங்கள் இயற்கை வாழிடத்தில் அச்சுறுத்தலாக உணரும்போதோ, தொந்தரவுக்குள்ளாகும்போதோ அல்லது தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நினைக்கும்போதோ இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர்.