ஒடிஸா: கழிவுநீா் தொட்டிக்குள் மூச்சுத்திணறி 6 போ் உயிரிழப்பு - கட்டுமானப் பணியின்போது சோகம்
ஒடிஸாவின் காலஹண்டி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கழிவுநீா் தொட்டிக்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 போ் உயிரிழந்தனா்.
ஒடிஸாவின் காலஹண்டி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கழிவுநீா் தொட்டிக்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 போ் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மதன்பூா்-ராம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கழிவுநீா் தொட்டி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக திறந்தநிலையில் இருந்த தொட்டியின் ஒரு பகுதிக்குள் கட்டட மேஸ்திரி தவறி உள்ளே விழுந்தாா். அவரை மீட்பதற்காக அவரது மகன், கொத்தனாா்கள், தொழிலாளிகள் என அடுத்தடுத்து 6 போ் உள்ளே சென்றனா். அவா்கள் அனைவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினா்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினா் சென்று, தகுந்த பாதுகாப்புடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். ஏழு பேரையும் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனையில் கட்டட மேஸ்திரி நிமய் பால், அவரது மகன் ஆகாஷ் பால் உள்பட 6 போ் உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. ஒருவா் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறாா்.
Advertisement
Advertisement
உயிரிழந்தவா்களில் 3 போ் கொத்தனாா்கள், ஒருவா் தொழிலாளி ஆவாா். இறப்புக்கான காரணத்தை உறுதி செய்ய விசாரணை நடைபெறுகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
கழிவுநீா் தொட்டிக்குள் 6 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வா் மோகன் சரண் மாஜீ, அவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளாா்.