புதிய முதலீடு? வியட்நாம் அதிபரை சந்தித்த கெளதம் அதானி!
மும்பையில் வியட்நாம் அதிபரை கெளதம் அதானி சந்தித்தது குறித்து...
இந்திய தொழிலதிபரும் கோடீஸ்வரருமான கெளதம் அதானி வியட்நாம் அதிபர் டோ லாமை மும்பையில் இன்று (மே 31) சந்தித்தார்.
தெற்கு மும்பையில் உள்ள விடுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டம் சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்தது.
இந்த சந்திப்பில் இருதரப்பில் பேசப்பட்ட விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், இந்தியா - வியட்நாம் வர்த்தகக் கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து இந்த சந்திப்பு நடந்துள்ளதால், முதலீடு குறித்து பேசப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
Advertisement
Advertisement
துறைமுகங்கள், எரிசக்தி, சிமெண்ட் மற்றும் மின்கடத்திகள் போன்ற பல்வேறு துறை வணிகத்தில் ஈடுபட்டு வரும் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 9.5 லட்சம் கோடி) முதலீடு செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.
குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடொன்றில் இந்த முதலீடு இருக்கும் எனக் கூறியிருந்ததார்.
இந்நிலையில், வியட்நாம் அதிபரை சந்தித்து இன்று கெளதம் அதானி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.