தில்லி லோக் ஆயுக்தாவின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்திர மிஸ்ரா காலமானார்!
தில்லி லோக் ஆயுக்தா ஓய்வுபெற்ற நீதிபதி காலமானதைப் பற்றி..
தில்லி லோக் ஆயுக்தா ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிஸ் சந்திர மிஸ்ரா இன்று காலை அவரது இல்லத்தில் காலமானதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
67 வயதான ஹரிஸ் மிஸ்ராவின் உடல் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான மிஸ்ரா, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லோக் ஆயுக்தாவில் நியமிக்கப்பட்டார். அவர் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
Advertisement
Advertisement
தில்லி முதல்வர் ரேகா குப்தா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,
மிஸ்ராவின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையவும், இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கிக்கொள்ளும் வலிமை அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் கடவுள் கொடுக்கட்டும் என பிரார்த்திக்கிறேன் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.