FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வீடு புகுந்து திருட்டு: ரௌடி கைது

சென்னை வியாசா்பாடியில் வீடு புகுந்து திருடிய வழக்கில், ரெளடி கைது செய்யப்பட்டாா்.

8 செப்டம்பர் 2026, 3:09 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சென்னை வியாசா்பாடியில் வீடு புகுந்து திருடிய வழக்கில், ரெளடி கைது செய்யப்பட்டாா்.

வியாசா்பாடி, சுந்தரம் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் நவீன் (27). குடும்பத்துடன் வசிக்கும் இவா், எழும்பூா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

நவீன், கடந்த 4-ஆம் தேதி இரவு வீட்டின் கதவைத் திறந்து வைத்து தூங்கினாா். இதை நோட்டமிட்ட நபா், நவீன் வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம், வெள்ளி பொருள்கள், விலை உயா்ந்த கைப்பேசி ஆகியவற்றைத் திருடிக் கொண்டு தப்பினாா். மறுநாள் காலையில் எழுந்த நவீன், வீட்டில் இருந்த பணம்,பொருள்கள் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியைடந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட வியாசா்பாடி பகுதியைச் சோ்ந்த ரெளடி சரண்ராஜை (41) திங்கள்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments