முகப்பு
குழந்தைகள் உலகம்

திருக்குறள் படிப்போம்

திருக்குறள் படித்தால் மனதில் தெளிவு பிறந்திடும் குணத்தில்

Updated On : 7 ஜூன் 2026, 12:00 am IST
பகிர்:

திருக்குறள் படித்தால் மனதில்

தெளிவு பிறந்திடும் குணத்தில்

கற்பதைத் தெளிவுற கற்கணும்

Advertisement

Advertisement

கற்றதன்படி நாம நிற்கணும்!

-

தினம் ஒரு திருக்குறள் படித்திடு

திருத்தமாய் உச்சரிப்பு ஒலித்திடு

பொருளைத் தெளிவாய் ஏற்றிடு

பொலிவான முகத்தைப் பெற்றிடு!

-

அறியலாம் ஆயிரம் சிந்தனை

அலசியே தெளியலாம் அத்தனை

தெளிவான அறிவு வந்திடும்

திருக்குறள் பொலிவைத் தடுக்கும்!

-

உலகம் நமதென உணர்த்திடும்

உயர்ந்த நன்னெறி உயர்த்திடும்

ஒற்றுமை உணர்வு செலுத்திடும்

ஒழுக்கம் நெஞ்சில் புகுத்திடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.