போளூர் அருகே யானை மிதித்து முன்னாள் ராணுவவீரர் சாவு
போளூர், பிப்.17: போளூர் அருகே மங்களாபுரம் என்னும் இடத்தில் காட்டு யானை மிதித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் பலியானார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஏழுமலை (வயது 52). இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உ
போளூர், பிப்.17: போளூர் அருகே மங்களாபுரம் என்னும் இடத்தில் காட்டு யானை மிதித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஏழுமலை (வயது 52). இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இன்று அதிகாலை தோட்டத்தில் நீர் பாய்ச்சுவதற்காக டார்ச் லைட் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். சந்தவாசல் வனச்சரகத்தைச் சேர்ந்த அந்தப் பகுதியில் இவரது டார்ச் லைட் வெளிச்சத்தைக் கண்டு அங்கே வந்த காட்டு யானை ஒன்று அவரைத் தாக்கியுள்ளது. இதில் அவர் உயிரிழந்தார்.
யானை மிதித்து முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பலியானது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.