தோப்புக்கொல்லை அகதி முகாமில் மாவீரர் தினம்
தனி ஈழம் மீட்க தன்னுடைய உயிர்களை போரில் நீத்தவர்களுக்காக மாவீரர் தினம் தோப்புக்கொல்லை முகாமில்...
தனி ஈழம் மீட்க தன்னுடைய உயிர்களை போரில் நீத்தவர்களுக்காக மாவீரர் தினம் தோப்புக்கொல்லை முகாமில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் க. அன்பன் தலைமை தாங்கினார்.
மாவீரர் இளங்குயில் ஆ.ஜெயசுதா (இரண்டாம் லெப்டினன்) அவரின் பெற்றோர் ஆ,பாப்பா முன்னிலையில் 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு ஈழம் பாடல்கள் ஒலிக்க மிகப் பிரமாண்டமாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அல்போன்ஸ்ராஜா, கணேசன் ஆகியோர் செய்தனர்.