முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல்வர் பொறுப்பில் இருந்து பழனிசாமி விலகியவுடன் புதிய முதல்வரை டிடிவி தினகரன் அறிவிப்பார்: புகழேந்தி பேட்டி

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

Updated On : 28 ஆகஸ்ட் 2017, 5:11 pm IST
பகிர்:

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: -  முதல்வர் பொறுப்பில் இருந்து பழனிசாமி விலகியவுடன் புதிய முதல்வரை டிடிவி அறிவிப்பார்.

முதல்வர் நடத்திய கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. எம்எல்ஏக்களை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு தான் உள்ளது. ஆளுநரின் முடிவுக்காகவே அனைவரும் காத்திருக்கிறோம் என்று கூறினார்.

மேலும்  ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் இணைந்தது தேர்தல் ஆணையத்திற்கு தெரியுமா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். பொதுக்குழு, செயற்குழுவை ஈபிஎஸ் கூட்ட முடியாது, பொதுக்குழுவை பொதுச்செயலாளர் தான் கூட்ட முடியும் எனவும் புகழேந்தி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.