முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் 9 இடங்களில் உள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு சீல்

சென்னையில் 9 இடங்களில் உள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Updated On : 31 ஜனவரி 2017, 7:56 pm IST
பகிர்:

சென்னையில் 9 இடங்களில் உள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளுக்கு உரிமம் பெறவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த ஹோட்டலில் விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து தற்போது வரை இந்த ஹோட்டலின் உரிமையாளர் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து செவ்வாயன்று மாநகராட்சி அதிகாரிகள் ஹோட்டலுக்கு சீல் வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.