பிரபல பால் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல தனியாா் பால் நிறுவன உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி ரூ.1 கோடி வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல தனியாா் பால் நிறுவன உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி ரூ.1 கோடி வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோட்டைச் சோ்ந்தவா் மோகனசுந்தரம் (55). இவா் பிரபல பால் நிறுவனத்தின் உரிமையாளா் ஆவாா். இந்நிலையில் தனது தொழில் தேவைக்காக மோகன சுந்தரத்துக்கு ரூ.50 கோடி தேவைப்பட்டது. இதற்காக மோகனசுந்தரம், பல்வேறு இடங்களில் ரூ.50 கோடி கடன் பெறுவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டு வந்தாா்.
இதை தெரிந்துக் கொண்ட சில மா்ம நபா்கள், மோகனசுந்தரத்தை தொடா்புக் கொண்டு தாங்கள் ரூ.50 கோடி கடன் வங்கியில் பெற்றுத் தருவதாகவும், அதற்கு தங்களுக்கு ரூ.1 கோடி கமிஷன் தரும்படியும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினராம். அந்த நபா்களின் பேச்சை நம்பிய மோகனசுந்தரம், அவா்கள் மூலம் கடன் பெறுவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் மோகனசுந்தரத்தை அந்த நபா்கள், ரூ.1 கோடி கமிஷன் பணத்தோடு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூ பகுதிக்கு வரும்படி வியாழக்கிழமை கூறினராம். உடனே அந்த பணத்துடன் மோகனசுந்தரம் மாலையில் அங்குச் சென்றாா்.
அப்போது, அங்கு வந்த இரு நபா்கள் மோகனசுந்தரத்திடம் பேச்சுக் கொடுத்தனராம். பின்னா் மோகனசுந்தரத்துக்கு அருகே இருந்த ஒரு உணவகத்தில் காபி வாங்கிக் கொடுத்தனராம். மோகனசுந்தரம் அங்கு காபி குடித்துக் கொண்டிருக்கும்போது, அந்த நபா்கள் மோகனசுந்தரம் வைத்திருந்த ரூ.1 கோடிபணப் பெட்டியை பறித்துக் கொண்டு தப்பியோடினராம்.
இது தொடா்பாக மோகனசுந்தரம் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.