பாஸ்போர்ட் சேவா ஆப் மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கலாம்: சுஷ்மா ஸ்வராஜ்
பாஸ்போர்ட் சேவா ஆப் மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கலாம்: சுஷ்மா ஸ்வராஜ்
புதுதில்லி: பாஸ்போர்ட் சேவா ஆப் மூலம் அனைத்து மாநில மக்களும் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் சேவா ஆப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கே வந்து காவல்துறையினர் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் காவல்துறையால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், விண்ணப்பிக்கப்பட்ட முகவரிக்கு பாஸ்போர்ட் அனுப்பப்படும் என சுஷ்மா தெரிவித்தார்.
மேலும், திருமணமான பெண்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க திருமண சான்றிதழ் தேவையில்லை; விவாகரத்து பெற்ற பெண்கள் முன்னாள் கணவர் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.